தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவில் பிரிடிக்ஸ் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஸ்டாலினின் 2 வயது குழந்தை ரோஜாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் கீழ் தூண்டில் விநாயகன்பேட்டை வீரச்சோழன் ஆற்று கட்டு கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இருவரும் ஆற்றில் விழுந்தனர்.

இதில் சாம்சன் நீந்தி கரைக்கு வந்தார். இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மூழ்கிய இரண்டு வயது குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர தேடலுக்கு பிறகு ரோஜாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் குழந்தையின் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.