விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சங்கிலி காளை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியுடன் இருளாண்டி செல்வகுமார் என்பவர் பழகி வந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்ததால் சங்கிலிக்காளைக்கும் செல்வக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சங்கிலி காளை தாக்கியதால் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சங்கிலி காளையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சங்கிலிக்காளைக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.