அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவில் தில்லையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி(23) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வேலைக்கு சென்ற இந்துமதி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் தில்லையம்மாள் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து தில்லையம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இந்துமதியை தேடி வருகின்றனர்.