கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ் – அக்ஷயா. இவர்களுக்கு 10 வயதில் யஷிதா என்ற மகள் இருந்தார். ராஜேஷின் தாய் பிரேமா இவர்களுடன் தான் இருந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் சோதனை செய்ததில் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.