தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், சுத்தி சுத்தி இதுக்குள்ளேயே வந்துகிட்டு இருக்கீங்க. எங்க சுத்துவீங்களோ மறுபடியும் அங்கேயே வரீங்க.  இப்படி சுத்துனாலும் அங்கே வரீங்க. நீங்க கேட்டீங்க பாஜகவோடு தொடர்புல இருக்கீங்களா ? என்று…  தொடர்புல இருக்கின்றோம்ன்னு சொல்லுறோம்.

தொடர்பில் உறுதியாக இருக்கிறோம். 3 மாதமாக நானும், TTVயும் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும். பாஜக தேசிய தலைமையுடன் தொடர்பில்இருக்கின்றோம்  என சொல்லியாச்சு. அதற்குப் பிறகு NDA கூட்டணி கூட்டத்தில் கூப்பிட்டார்களா ? இல்லையா என்று கேட்டு ஏன் சண்டையை மூட்டி விட்டுகிட்டே இருக்கீங்க ?

எங்களால் கூட்டணி இல்லாமல் தனித்தும் செயல்பட முடியும். மீண்டும் NDA கூட்டணி தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய உடனே தனது சட்டை பையில் இருந்த செல்போனை தூக்கி காண்பித்த ஓபிஎஸ், இந்த செல்லில் இருக்கின்றது. இன்றைக்கு தேதி வரைக்கும் இருக்கு. நாளைக்கு உங்கிட்ட பேசும்போது அந்த தேதியை காண்பிப்பேன் என தெரிவித்தார். மழை காரணமாக புரட்சி பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் நடத்த வேண்டும் என்று முடிவு பண்ணி பேசி வைத்துள்ளோம். மாவட்ட செயலாளர்கள்,  தலைமை கழக நிர்வாகிகள் கூட்டமும்  முடிவு பண்ணி வைத்திருக்கிறோம். தேதி அறிவிக்க இருக்கின்றோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்ற வாக்காளர்கள், வாக்கு சிதறாது. எங்களுக்கு தான் விழும். தொண்டர்கள் எங்க பக்கம் தான் இருக்காங்க.

ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று நாங்க முதல்ல இருந்து அதைத்தான் சொல்லிக்கிட்டே இருக்கிறோம். சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும். ஒன்றாக சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும் என்று நாங்க தான்  சொல்லிட்டு இருக்கிறோம். அவர் கிட்ட போய் கேளுங்க. பழனிச்சாமி கிட்ட போய் கேளுங்க. அவர் முடியாது, முடியாது என்று சொல்லி, இதோடு பத்து தோல்வி ஆகிடுச்சு.

உடனே செய்தியாளர்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் தனித்தனத்தில் போட்டியிடுவீர்களா ?  தாமரை சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, சிரித்து கொண்டு இருந்த ஓ பன்னீர்செல்வம் அருகில் இருந்த வைத்தியலிங்கம்,  இரட்டை இலையில் போட்டியிடுவோம் என்று தெரிவிக்க… மற்றொரு குரலாக அருகில் இருந்த புகழேந்தி,

இரட்டை இலையில் போட்டியிடுவோம் என்று அழுத்தமாக சொல்ல… சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளோம். எங்களுக்கு தான் நியாயம் கிடைக்கும். சட்ட விதி எங்களுக்கு தான் என்று வைத்தியலிங்கம் சொன்னார். அடுத்தது பேசிய புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் அவர்தான் ஒருங்கிணைப்பாளர் என உள்ளது என புகழேந்தியின் சொல்ல, கட்சி அண்ணன் கிட்ட தான் இருக்கு என்று கூறினார்.