பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற கணவரான வீரேந்திர சிங்கை மனைவியே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பக்சர் பகுதியில் வசித்து வந்த வீரேந்திர சிங் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் தவறான உறவு இருந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவருக்குத் தெரியவரவே, இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

தங்கள் தொடர்புக்கு இடையூறாக இருக்கும் வீரேந்திர சிங்கை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட முடிவெடுத்த அந்தப் பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூர திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கத்தியால் மிகக் கொடூரமான முறையில் வெட்டி துடிக்க துடிக்க படுகொலை செய்தார்.  என்ற ஆயுதத்தைக் கொண்டு, கணவரை சடசடவென வெட்டிக் படுகொலை செய்துள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் வீரேந்திர சிங் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து உயிரிழந்த வீரேந்திர சிங்கின் சகோதரர் ஜிதேந்திர சிங் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தலைமறைவாக உள்ள அந்தப் பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.