செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  உங்களில் பல பேருக்கு நினைவிருக்கும். ஆட்சியிலே இருந்தபோது செயற்குழு கூட்டம் நடந்தது. அதிலேயே நான் சொன்னேன் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிலைப்படுத்தாதீர்கள். ஒரு பொலிட் பீரோ மாதிரி கூடுங்கள்.  கட்சியினுடைய கொள்கையை சொல்லுங்கள். புரட்சித் தலைவர் – புரட்சித்தலைவியை மக்களிடத்தே காட்டுங்கள். ஜெயிப்பீர்கள் என்றேன்.

நீங்கள் எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தி இருந்தால் தோற்ப்பீர்கள் என்று சொன்னேன். எல்லோருமே என்னை சத்தம் போட்டு,  என்னை வெளியே போக சொன்னார்கள். நான் வெளியே வந்தேன்.  என்னாச்சு ? என சொன்ன… உடனே நானும் அதைத்தான் சொன்னேன் என்று ஓபிஎஸ் சைடில் இருந்து சொல்ல என்ன ஆச்சு ? என்ன ஆச்சு ? என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசத் தொடங்கினார்.

இவங்க மறுபடியும் என்னை முன்னிலைப்படுத்த வேண்டும். அதே நோய் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு. மீண்டும் அவரை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும். அதுதான் டெல்லியில் இருக்கின்ற பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கு இருக்கக்கூடிய முக்கியமான கோரிக்கை. அதை சொல்லிட்டு அண்ணாவையும்,  புரட்சித்தலைவி அம்மாவையும் சொல்லிட்டு திசை தெரிவிப்ப பார்க்கிறார்கள்.

பிஜேபி என்ன முடிவெடுக்குமோ, அதன் பிறகு நாங்கள் முடிவெடுப்போம். நாங்கள் இருப்போம் என்று பிஜேபி அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்ளவில்லை. பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார் ஓபிஎஸ். எங்களை பொருத்தவரை நாங்கள் சொல்கின்றோம். அகில இந்திய அளவில் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அது இல்லை என்று சொல்ல முடியாது.

நாங்க கூட்டணியில் இருக்கோமா ? இல்லையா ? என்பதே இன்னும் முடிவாகவில்லை.  தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக… முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்று எந்த மனநோயால் சொன்னார்களோ, அதே நோய் தான் இன்றைக்கு இந்த பிளவுக்கு காரணமே தவிர வேறு ஏதும் இல்லை. எங்களையும்,  டிடிவி தினகரனையும் NDA  கூட்டணியில் வைக்க வேண்டும் என்று ADMKவுக்கு கண்டிஷன் என சொல்வதை ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதை எல்லாம் நம்பாதீர்கள்.

எங்களைப் பொருத்தவரையில் இன்றைக்கு நாங்கள் நம்புகிறோம். கழகத் தொண்டர்களும்,  பொதுமக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். நிர்வாகிகள் தான்  பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள்.  புரட்சித்தலைவர் காலத்திலேயே அவரோடு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் வந்தார். அதேபோல ஜானகி – ஜெயலலிதா அணி பிளவு ஏற்பட்ட போது,  எல்லா சட்டமன்ற உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் எல்லாம் ஜானகி பக்கம் தான் இருந்தார்கள். என்ன ஆச்சு ? மக்கள் அடுத்த  தேர்தலில் எது உண்மையான  கட்சி என்பதை நிரூபித்தார்கள். 2024 இல் நாங்கள் நிரூபித்து காட்டுகிறோம் என தெரிவித்தார்.