தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடி காடு கிராமத்தில் சுமன் என்பவர் வசித்து வந்தார். இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நானும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கழுகரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் அபிநயாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

இந்நிலையில் திருப்பூர் சவுண்டம்மன் கோவிலில் வைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். தற்போது நாங்கள் காதல்  திருமணம் செய்ததால் எங்களையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டி வருகின்றனர். அதனால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் எங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.