தஞ்சை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ஆர்.பி.எஸ் வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளம் அறிவியல் வேளாண்மை பிரிவில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் தங்கி கள பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை இந்த பயிற்சியின் போது கற்றுக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணத்தங்குடி மேலையூர் விவசாயி மூர்த்தி என்பவரிடம் டிராக்டர் மூலமாக வயலில் இறங்கி உழவு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அந்த பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.