தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாகத் தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்பட்டுள்ளதால், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று மாலை 6 மணியளவில் அடுத்தடுத்த நிமிடங்களில் முறையே 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் பதிவான இந்த அசுர நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த நாடும் குலுங்கியதை அடுத்து, அந்நாட்டு இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ள சூழலில், இப்பேரழிவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10,000 வரை இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அதிர்ச்சிகரமான பூர்வாங்க மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
Over 100000 people lost their lives in Catastrophic earthquake in Venezuela 💔
One of the biggest natural disaster in human history. pic.twitter.com/Hjdz5fRiQx
— Baba Banaras™ (@RealBababanaras) June 25, 2026
“>
நிலநடுக்க பாதிப்பால் நாட்டின் முதன்மை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, மின்சாரம் மற்றும் இணையச் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்குத் தேவையான அவசர மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன.
