சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அமைச்சர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள மழலைச் செல்வங்களைக் கண்டதும் மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் தரையில் அமர்ந்து அன்பாகப் பேசினார்.

குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்டு ரசித்த அவர், அவர்களுக்குத் தனது கைகளால் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறையும், அதிகாரத் தோரணை இல்லாமல் குழந்தைகளிடம் அவர் காட்டிய கனிவான அன்பும் அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

“>

 

ஒரு அமைச்சராக மட்டுமன்றி, ஒரு பொறுப்புள்ள பெரியவராக அவர் மழலைகளுடன் பழகிய விதம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.