தஞ்சை திருவிடைமருதூரில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தான் ஜாதி  பாகுபாடுகள் அதிகமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தீண்டாமை கொடுமைகள் உள்ளன என்று கூறிய ஆளுநர் ஆர்.என் ரவி, பட்டியல் இனத்தவர்கள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் தமிழகத்தில் நடக்கின்றன. கோயிலுக்குள் அனுமதி மறுப்பது, குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பது போன்ற தீண்டாமைகள் நிகழ்கின்றன என பேசி உள்ளார்.