தமிழகத்தில் தான் ஜாதி பாகுபாடு அதிகமாக உள்ளது.  பட்டியல் இனத்தவர்கள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் நடக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் தீண்டாமையும் அதிகம். கோயிலுக்குள் அனுமதி மறுப்பது,  குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பது போன்ற தீண்டாமைகள் நிகழ்ந்திருக்கின்றன என தஞ்சையில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேசி உள்ளார்.