சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாரிமுத்து மற்றும் அவரது மனைவி கௌரி ஆகிய இரண்டு பேரும் வருவாய்த்துறையினர் வெள்ளை கண்ணுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.