தாட்கோ மூலம் மானியத்தில் மின்மோட்டார், குழாய்கள் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி  குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நீர் பாசனத்திற்காக பிவிசி குழாய்கள் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.15,000 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு நில மேம்பாட்டிற்காக புதிய மின்மோட்டார் அல்லது பழைய மின்மோட்டார் பதிலாக புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு ஒரு விவசாயிக்கு ரூ.10,000 தாட்கோ மூலமாக மானியமாக வழங்கப்பட உள்ளது.

இதற்கு நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்னும் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து மானியம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது குறித்த விவரங்களை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை 04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும் தாட்கோ மாவட்ட மேலாளரை 9445029466 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.