விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இந்த ஆட்சியில் மந்திரிக்கே ஒன்னும் தெரியல…. இங்க பொன்முடி இருக்கின்றாரு. உயர்கல்வித்துறை  அமைச்சருன்னு சொல்லுறாரு…யாரை துணை வேந்தராக போடுறாங்க ? யாரை பதிவாளரா போடுறாங்க ? எந்த வாத்தியாரை எங்க ட்ரான்ஸ்ஃபர் பண்றாங்க ? என அவருக்கே தெரியாது.

பைல் வரும்போதுதான் இப்படியா…? யாருப்பா கொடுத்தது…  அது மாப்பிள்ளை கொடுத்தாரு. இது புள்ள கொடுத்தாரு. அது அவுங்க அத்தை கொடுத்துச்சு…  உடனே வாயை மூடிட்டு ஒன்னும் இல்ல…  பைல் வரும்,  கையெழுத்து போடனும் …கோடிட்டு இடத்தை நிரப்பு. இந்த ஸ்கூல் பசங்க எல்லாம் ஸ்கூல்ல படிக்கிறாங்க இல்ல… கேள்வி கேப்பாங்க…..

கோடிட்ட இடத்தை நிரப்பு…. அந்த மாதிரி இந்த மந்திரிகளுக்கு எல்லாம் என்ன வேலை ? கோடிட்ட இடத்தை நிரப்பனும்…    மாப்பிள்ளை கையெழுத்து போடு பொன்முடி…. மருமகன் கையெழுத்து போடு பொன்முடி….  அத்தை கனிமொழி கையெழுத்து போடு பொன்முடி…  இவ்வளவுதான். படிக்க கூட கூடாது.. சொன்ன இடத்துல கையெழுத்து போடுகின்ற ரப்பர் ஸ்டாம்ப் தான் இன்றைய அமைச்சர்கள். என்ன நடக்குது என அவங்களுக்கு தெரியல.

இந்த ஆட்சியில் என்ன நடக்குதுன்னு எந்த அமைச்சருக்கும் தெரியல. எந்த அமைச்சருக்கும் அதிகாரம் கிடையாது.  ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரே குடும்பத்தில் இருக்கின்றது.  உண்மையிலேயே இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் யார் தெரியுமா?  துர்கா ஸ்டாலின்…  அவரை இயக்குவது யார் ? அவருடைய மருமகன் சபரீசன். இவங்கதான் இன்னைக்கு  ஆட்சி  என தெரிவித்தார்.