இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்தது. அந்த வரிசையில் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக தற்போது உயர்ந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுள்ளது. அன்றாட சமையலில் முக்கிய இடத்தை பிடித்த வெங்காயத்தின் விலை திடீரென்று உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

கடந்த 10 நாட்களாகவே வெங்காய விலை உச்சத்தில் இருந்து வருகிறது. அதனை குறைக்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்தும், எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இன்று கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 60 முதல் 65 வரை விற்பனை ஆனது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 முதல் 110 என விற்கிறது. பெரிய வெங்காயத்தை பண்ணை கடைகளில் கிலோ 25க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.