திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று இரவு பைக்கில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தனர். பைக்கை சர்க்கார் ஒட்டி சென்றார். இருவரும் சென்று கொண்டிருந்த போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்து மின் கம்பத்தின் மீது மோதி முட்புதற்குள் விழுந்தது.

இதில் கணேசன் மற்றும் சர்க்கார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்கள் இருவரும் மது போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.