நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடியது.

நேற்று கோவை-மதுரை அணிகள் போட்டியிட்டன. அப்போது மதுரை அணி வீரர் நேரு(60) விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் அவரை ஆம்புலன்ஸில் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் நேரு மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.