டாஸ்மார்க் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது.

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகம் செய்யும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எதிர்த்து வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பானு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு  நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்,  விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடக்கும் இடங்களிலும் மதுபானங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என விளக்கம் அளித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுவிலக்கு  சட்டப்படி பொது இடங்களில் மது அருந்துவது குற்றம் எனவும்,  விளையாட்டு மைதானங்கள்,  கருத்தரங்குகள் பொது இடங்களில் என்பதால்,  அங்கு மதுபானம் விநியோகிக்க கூடாது என்றார்.

அப்போது நீதிபதிகள் கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால்,  ஜாதி அமைப்புகள், அரசியல் கட்சிகள் மாநாடுகளிலும் மதுபானம் விநியோகிக்க  கோருவார்கள் . இசை நிகழ்ச்சி நடத்துவதாக கோரி, டிக்கெட் வழங்கும் போது மதுபானம் இலவசம் என  அறிவித்தால், அது  விற்பனையாகாதா ?  என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர்,   மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூலமே மட்டுமே அரசாங்கம் செயல்படுவதாக கூறுவது தவறு என தெரிவித்தார். இதையடுத்து விளையாட்டு மைதானங்கள்,  கருத்தரங்குகள்,  பொது  இருக்கும்போது….  சர்வதேச கருத்தரங்குகள்,  விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகிப்பது அரசியல்  சட்டத்திற்கு எதிரானது என கூறி, இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,   விசாரணையை டிசம்பர் 3ஆவது வாரத்திற்கு ஒத்தி வைத்தார்கள்.