தமிழ்நாட்டில் 12 துறைமுக திட்டங்கள் மேற்கொள்ள ரூ.12,178 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்வானந்த் சோனோவால் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விரைவுச் சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ரூ.60,872 கோடி செலவில் துறைமுகங்கள், பொருளாதார மண்டலங்களின் இணைப்பு உள்ளிட்ட 101 திட்டங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய-மாநில அரசுகளின் பல அமைச்சகங்களை ஒருங்கிணைப்பது பிரதமரின் விரைவுச் சக்தி தேசிய பெருந்திட்டமாகும். இத்திட்டத்தில் ரூ. 4,423 கோடி மதிப்பிலான 13 திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுலதா டியோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் சோனோவால்இவ்வாறு பதில் அளித்துள்ளார்.