தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு காய்ச்சல் எதிரொலியாக முன்கூட்டியே இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு முன்பாகவே இறுதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.