தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் ஜாரி கொண்டாலம்பட்டியில் தேர்வுகள் முடியும் வரை கோவில் திருவிழாக்களை ஒத்திவைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தற்போது உயர்நீதிமன்றம் தேர்வுகளை கருத்தில் கோவில்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது.