ஒரு கொடூரமான நல்ல பாம்பின் தொடர் தாக்குதல்களில் இருந்து, ஒரு பூனை மிகச் சுலபமாகத் தப்பிக்கும் அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாகப் பாம்பைக் கண்டால் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவரும் அஞ்சி நடுங்கி ஓடுவார்கள். ஆனால், இந்த வீடியோவில் ஒரு பூனை, தன்னைக் கொத்த வரும் நல்ல பாம்பை பார்த்து பயந்து ஓடாமல், அதற்கு மிக அருகில் நின்று தைரியமாக எதிர்கொள்கிறது.

“>

பாம்பு சீறிக்கொண்டு பூனையை நோக்கித் தாக்கும்போதெல்லாம், பூனை தனது கூர்மையான பார்வையாலும், சுறுசுறுப்பான நகர்வாலும் நொடிப்பொழுதில் பக்கவாட்டிலும் பின்னோக்கியும் நகர்ந்து தப்பிக்கிறது. இந்த பரபரப்பான மோதலின் போது, நல்ல பாம்பு பலமுறை பூனையைக் கொத்த முயன்றும், பூனையின் அதிவேக எதிர்வினையால் அதைக் கடிக்க முடியாமல் போகிறது.

ஒரு கட்டத்தில் தற்காத்துக் கொள்வது மட்டுமின்றி, பூனை தனது முன்னங்காலால் பாம்பை திருப்பி அடிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. எவ்வளவு முயன்றும் பூனையை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த அந்த நல்ல பாம்பு, இறுதியில் அங்கிருந்து மெதுவாக ஊர்ந்து விலகிச் செல்கிறது.

பூனைகளின் எதிர்வினை வேகம் சுமார் 20 முதல் 70 மில்லி விநாடிகளாகவும், பாம்பின் தாக்குதல் வேகம் 50 முதல் 100 மில்லி விநாடிகளாகவும் இருப்பதால், பூனையால் பாம்பின் தாக்குதலை விட விரைவாகச் செயல்பட முடிவதாக இணையவாசிகளிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆச்சரியமூட்டும் காணொளி ‘X’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி, பயனர்களின் விதவிதமான கருத்துக்களை ஈர்த்து வருகிறது. “பூனை தனது உயிரை விட ‘கெத்து’ தான் முக்கியம் என நினைத்துவிட்டது”, “இது பூனையின் அசாதாரணமான தற்காப்புத் திறன்” என்றும், பலர் பூனையை விளையாட்டாக “கேங்ஸ்டர்” என்றும் பாராட்டி வருகின்றனர்.

இருப்பினும், நச்சுத்தன்மை கொண்ட நல்ல பாம்புடன் மோதுவது உயிருக்கே ஆபத்தானது என்றும், இத்தகைய மோதல்கள் நொடிப்பொழுதில் பெரும் விபத்தில் முடியக்கூடும் என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பூனையின் இந்த மின்னல் வேகத் தப்பியோட்டம், அதன் ஒன்பது ஆயுள்களில் ஒன்றை இன்று காப்பாற்றியுள்ளது என நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கூறி வருகின்றனர்.