ஆஸ்திரியா நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் அங்கு அவ்வப்போது பனிச்சரிவு அபாயங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பனிசரிவு அபாயங்கள் அதிகமாக உள்ளது என்று டைரோல் மற்றும் வோரல்பேர்க் மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் வார இறுதி நாட்களில் பனி சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெரும் பனிசரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி சுமார் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.