திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னியம்பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஸ்வா, சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு நுண்பு சோழவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்கிறது.

இந்நிலையில் இரண்டு சிறுவர்களும் மோட்டார் பம்ப் செட்டிற்கு சென்ற போது இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்வது தெரியாமல் இரும்பு குழாயை தொட்டனர். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.