காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலம் பகுதியில் பிரபல ரவுடியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சிறு தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது, கொலை முயற்சி என 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிள்ளை சத்திரம் பகுதியில் இரும்பு கடை நடத்தி வரும் ஒருவரிடம் கத்தி முனையில் குணசேகரன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறித்தார்.

அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கலை செல்வி குணசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதன் அடிப்படையில் குணசேகரன் மீது நான்காவது முறையாக குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.