விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாட்டனூர் புதுச்சேரி தமிழக வெள்ளையான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக வேன் ஓட்டுனர் பதிலளித்துள்ளார்.

இதனால் போலீசாருக்கும், வேன் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.