தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணையாக வழங்குகிறது. இதற்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்க பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் இருக்கும் நியாய விலை கடையில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதனை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்துள்ளார்.