தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிக்கோவில் பெஸ்ட் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மணிவண்ணன் என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் பொருட்கள் விற்பனை செய்ததற்கான உரிய ஆவணங்களையும் வசூலான பணத்தையும் மணிவண்ணன் முறையாக நிறுவனத்தில் செலுத்தவில்லை. இதுகுறித்து அசோகன் மணிவண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது மணிவண்ணன் 20 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிவண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.