சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமாருக்கு வாட்ஸ் அப் குரூப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி சதீஷ்குமார் பல்வேறு தவனைகளாக 13 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் சதீஷ்குமாரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தான் ஏமாற்றபட்டதை அறிந்த சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.