விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் 41 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வீட்டில் இருந்த 4000 ரூபாய் பணத்தை எடுத்து செலவு செய்ததாக தெரிகிறது. அவரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சிறுவன் தனது தந்தையை கண்டித்தான். மேலும் கோபத்தில் சிறுவன் தனது தந்தையை அரிவாளால் வெட்டினான். இதில் படுகாயமடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.