விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலை மணிநகரில் திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வடிவேல் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 20-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் திவ்யா தனது வீட்டில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக வடிவேல் தனது உறவினர் நாகராஜ் உதவியுடன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வடிவேலுவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் நாகராஜை தேடி வருகின்றனர்.