செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், 2018 இல் இருந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 7th Governing Body Meeting நடக்குது. அதாவது புலிகள் காப்பங்களோடு Governing Body Meeting. கொரோனா காலம் அப்படிங்கிற சில காரணங்களால இந்த மீட்டிங் ஒரு சில வருடங்கள் நடக்காமல் இருந்தது. இன்றைக்கு நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நம்முடைய முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி புலிகள் காப்பகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
நிறைய பணிகளை புலிகள் காப்பகத்தில் செய்து வருகின்றோம். மிக முக்கியமாக நம்ம தமிழ்நாட்டில் ஐந்து புலிகள் காப்பகங்கள் இருக்கு. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு புலிகள் காப்பகங்களில் பல்வேறு பணிகள் தொடர்ந்து வருடங்கள் முழுக்க நடைபெற்றுக் கொண்டிருக்கு. புலிகளை காப்பதில் மட்டும் இல்லாமல், அதை சார்ந்து, அங்கு இருக்ககூடிய பழங்குடி இன மக்களுக்காகவும், அங்கு இருக்கும் காட்டுப் பகுதிகளுக்கும்… பல்வேறு பணிகள் சார்ந்த ஒரு ஆய்வுக் கூட்டம் தான் நடந்திருக்கு.
மிக முக்கியமாக நம்ம இந்திய திருநாட்டில்… நமது தமிழ்நாட்டில் புலிகள் காப்பகத்தில் சிறந்த முறையில் பணியாற்றுகிறோம் என்கின்ற அங்கீகாரம் கொடுத்திருக்கின்றார்கள் . முக்கியமாக சொல்லப்போனால், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் மிக சிறந்த முறையில் பண்றாங்க அப்படின்ற எக்சலெண்ட் கேட்டகிரியில் நமக்கு அங்கீகாரம் கொடுத்திருக்காங்க.
அடுத்து தலக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு வெரி குட் கேட்டகிரி என்கின்ற அங்கீகாரத்தை கொடுத்திருக்காங்க. அது மட்டும் இல்லாமல் அடுத்து புதுசா ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்கும் குட் அப்படிங்கிற கேட்டகிரியில் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க என தெரிவித்தார்.