மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் தற்காலிக அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த 11-ஆம் வகுப்பு மாணவருக்கும் கண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் பி.காம் படித்திருப்பதாகவும், இலவசமாக டியூஷன் எடுப்பதாகவும் கண்ணன் கூறி தான் தங்கி இருக்கும் அறைக்கு வருமாறு அழைத்தார்.

அவர் கூறியபடி மாணவர் அங்கு சென்றதும் கண்ணன் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்த மாணவன் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.