திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு பின் கால்நடை மருத்துவமனை வளாக பழைய கட்டிடம் இருக்கிறது. அங்கு உபயோகப்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மின்கசிவால் கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.