சிவகங்கையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மணமேடையில் கண்கலங்கி நின்றவாறு காட்சி வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனது சகோதரி மகளின் நிச்சயதார்த்தத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் நின்று கண்கலங்கிய சீமானை அவரது சகோதரி அரவணைத்து ஆறுதல் கூறினார். மணமகளை வாழ்த்தி பேசியபோது உணர்ச்சி வசப்பட்டு சீமான் கண்கலங்கியதால் அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.