தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகும் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியர் ஜான்சன், சண்முகசுந்தரபுரம் ஊராட்சி தலைவர் ரத்தினம் ஆகியோர் பள்ளிக்கு வராத மாணவர்களின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி அளித்தனர்.