விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நகர் என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பவித்ரன் என்று சிறுவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்றிரவு பவித்ரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பவித்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பவித்ரன்  ஒரு மாணவியை கேலி செய்துள்ளார். இதனை ஆசிரியர்கள் கண்டித்து பவித்ரனை முட்டி போட வைத்ததால் மன உளைச்சலில் பவித்ரன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் அந்த பள்ளியில்  வேலை பார்க்கும் 3 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.