கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் என்ற 3  மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயர் தனது 3  மகன்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு  முன்பு அன்பழகன் இறந்துவிட்டார். மற்ற 2  மகன்களும் தன்னை பராமரிக்கவில்லை என கூறி ராயர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த மனு தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தது.

முன்னதாக லோகநாதன் தனது தந்தை வீட்டு பீரோலை உடைத்து 1௦ ஆயிரம் ரூபாய் பணம்,  பாத்திரங்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து ராயர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தந்தையை பராமரிக்காத ராமமூர்த்தி மற்றும் லோகநாதன் ஆகிய 2  பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் மற்றும் பாத்திரங்களை திருடிய லோகநாதனை போலீசார் கைது செய்தனர்.