செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, எனக்கு இன்னும் இதில் கவலை அளிக்க கூடிய விஷயம்…  தமிழ்நாடு டிஜிபி அவருக்கு ( ஜாபர் ஜாதிக் ) பரிசு கொடுக்கிறார். டிஜிபி  கமிஷனராக  இருந்தபோது இவர் புழல் சிறையில் இருந்தார். சென்னையில் ஜெயில் இருந்தாரு, இது டிஜிபிக்கு தெரியாதா? ஆகவே இன்னைக்கு தமிழகம் பெற்றோர்கள், பெரியவர்கள், அடுத்த தலைமுறை பற்றி கவலைப்படுவது மாதிரியா ஒரு கேவலமான சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கு.

அதனால் முதலில் தமிழகத்தை காப்பாற்றுங்கள்,  இவர் என்னமோ இந்தியாவை காப்பாற்றுவேன்னு போஸ்டர் அடிக்கிறாரு. இந்தியான்னு சொல்ல வச்சிருக்கோமே, பிரிவினைவாத,  தேசவிரோத,  தீய சக்திகள் தனி நாடு கேட்போம்….  முகமது அலி ஜின்னா  பாகிஸ்தான் கோரிக்கை மாநாடு கராச்சில நடத்தும் பொழுது ஈவேரா எழுதியது…

ஈவே ராமசாமி நாயக்கர் அவர் எழுதுன கடிதம் ஏன்னா…. அதில் அவர் கையெழுத்து அப்படி போட்டு இருக்காரு. அதனால ஈவே ராமசாமி நாயக்கர் என சொல்றேன். எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. அதுல அவர் ஈ வே ராமசாமி நாயக்கர் அப்படின்னு ஜின்னாக்கு எழுதுன கடிதத்துல கையெழுத்து போட்டு இருக்காரு.

அதுல ஈ வெ ரா என்ன சொல்லி இருக்காரு ? நீங்க பாகிஸ்தான் கோரிக்கை கேட்கிற மாதிரி நான் திராவிடஸ்தான் கோரிக்கை கேட்கிறேன். என் மாநாட்டுக்கு நீங்க வாங்கன்னு இன்வைட் பண்ணாரா ?  இல்லையா ? பிறவி தேச துரோகிகள்… பிரிவினைவாதிகள்…. இவங்க இன்னைக்கு புதுசா கிளம்பி இருக்காங்க… வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாத முதலமைச்சர்,  அவர் என்னமோ பாசிசத்தை விரட்ட போறாராம் என பேசினார்.