மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கலவரம் வெடித்து வருகிறது. அதாவது அங்க குக்கி மற்றும் மைத்தேயி என இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது வன்முறையாக மாறி பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என ஏ.ஆர் ரகுமான் தற்போது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் மணிப்பூரில் உள்ள தேவாலயங்கள், வீடுகள், கடைகள் போன்றவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடிய விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக ஏ.ஆர் ரகுமான் தற்போது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.