விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் ரியா விஸ்வநாதன். நாளுக்கு நாள் ராஜா ராணி-2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென ரியா விஸ்வநாதன் இந்த தொடரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ரியாவுக்கு பதில் இப்போது ஆஷா கௌடா நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தன்னிடம் எதுவும் சொல்லாமல் ராஜா ராணி-2 தொடரில் இருந்து தன்னை வெளியேற்றி விட்டதாக வீடியோ ஒன்றின் வாயிலாக தெரியப்படுத்தி இருந்தார் ரியா. அதன்பின் ரியா விஸ்வநாதன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புது சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த சீரியலுக்கு சண்டைக்கோழி என டைட்டில் வைத்துள்ளதாகவும் இரட்டை ரோஜா சீரியலுக்கு பதில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கூடிய விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.