விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லையநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை(33) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் உத்தண்டுகாளை சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி(22) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் அபிநயா என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது வர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வர்ஷனியின் மாமனார் கருப்பசாமி, மாமியார் சோலையம்மாள் ஆகிய இருவரும் அடிக்கடி வர்ஷினியை திட்டியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலையில் இருந்த வர்ஷினி எனது மரணத்திற்கு மாமனார், மாமியார் தான் காரணம் என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உத்தண்டுகாளை வீட்டிற்கு விரைந்து தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வர்ஷினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.