திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருந்து உடல் கருகிய நிலையில் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாதி உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபர் மீட்கப்பட்ட இடத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்த செல்போன், ஆதார் கார்டு, பட்ட படிப்பு சான்றிதழ் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாலிபர் சென்னை கொளத்தூர் பகுதியில் சேர்ந்த ஜெகதீஸ்வரர்(22) என்பது தெரியவந்தது. மேலும் ஜெகதீஸ்வரர் தனக்குத்தானே உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டது தெரியவந்துள்ளது.