கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அன்புமொழி கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானதில் அன்புமொழி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார்.

ஆனால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 500-க்கு 335 மதிப்பெண்கள் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்த அன்பு மொழி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்புமொழி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.