தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி போலீஸ் சபீன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் ரேஷன் கடை முன்பு சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(24), சென்னப்பன்(39), வெங்கடேசன்(48) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.