திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் இருக்கும் சாலையோர கால்வாயில் வாலிபரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலுக்கு அருகே மோட்டார் சைக்கிள் கிடந்தது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பழனி அடிவாரத்தைச் சேர்ந்த பாலமுருகன்(22) என்பது தெரியவந்தது. அவர் விபத்தல் சிக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.