கடலூர் மாவட்டத்தில் உள்ள மே.மாத்தூர் கிராமத்தில் வெங்கடேசன்-சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்திவேல்(11) என்ற மகன் இருந்துள்ளான். வெங்கடேசன் பெங்களூரில் வேலை பார்ப்பதால் இன்று குடும்பத்துடன் அங்கு செல்ல முடிவு எடுத்தனர். முன்னதாக சுமதி தனது தோழிகளை பார்ப்பதற்காக கணவருடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது மகன் சக்தியை மாமியார் மருவாயியிடம் விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டிலிருந்து மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சேலை சக்தியின் உடல் முழுவதும் சுற்றியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சக்தி மயங்கி விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சக்தியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சக்தி ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.