கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கூரை வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கந்தனும் அவரது குடும்பத்தினரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் சாம்பலானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.